/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மது போதையில் தகராறு கத்தியால் குத்தியவர் கைது
/
மது போதையில் தகராறு கத்தியால் குத்தியவர் கைது
ADDED : மே 28, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் :அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ண தாஸ், 24, மோகன்லால் தாஸ், 32. இருவரும், ஓசூர் அருகே பொம்மாண்டப்பள்ளியில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். கடந்த, 25ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, இருவரும் அறையில் மது அருந்தினர்.
அப்போது அவர்களுக்குள் வார்த்தை தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மோகன்லால் தாஸ், கத்தியால் ராமகிருஷ்ணதாசை வயிற்றில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த அவர் புகார் படி, மத்திகிரி போலீசார், மோகன்லால் தாசை நேற்று முன்தினம் கைது செய்தனர்.