ADDED : ஜூன் 27, 2025 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் முகூர்த்த நாளான நேற்று 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. பெரும்பாலானோர் கார், வேன், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்ததால் கோயில் முன்பு நெரிசல் ஏற்பட்டது. கார்கள் அணிவகுத்து நின்றன.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. கோயில் வாசல் முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.