/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 10 பேர் மீது வழக்குப்பதிவு
/
போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 10 பேர் மீது வழக்குப்பதிவு
போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 10 பேர் மீது வழக்குப்பதிவு
போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 10 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஜூலை 31, 2024 07:32 AM
ஓமலுார்: ஓமலுார், ஊமை மாரியம்மன் கோவில் அருகே புறம்போக்கு நிலத்தில் இருந்த காய்-கறி கடை, கடந்த மார்ச், 14ல் கோவில் நிர்வா-கிகள் சார்பில் அகற்றப்பட்டது. மறுநாள் கோவில் அருகே வசிக்கும் வசந்தி, 49, காய்கறி கடை வைத்திருந்தவருக்கு ஆதரவாக பேசினார்.
அப்போது வசந்தியின் கணவர் குப்புசாமியை, கடையை அகற்ற வந்தவர்கள் தாக்கியதாக, ஓமலுார் போலீசில் வசந்தி புகார் அளித்தார். அதேபோல் வசந்தி, அவரது கணவர் உள்பட சிலர் மீது கோவில் நிர்வாகிகள் புகார் அளிக்க, ஓமலுார் போலீசார் வழக்குப்பதிந்தனர்.நேற்று காலை, வழக்கு நடவடிக்கை குறித்து ஓமலுார் போலீசாரிடம் பேசிவிட்டு வெளியே வந்த வசந்தி உள்பட, 10 பேர், போலீசார் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார், அவர்களை ஸ்டேஷன் உள்ளே அழைத்து சென்று அமர வைத்து மாலையில் விடுவித்தார். இருப்பினும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஓமலுார் வி.ஏ.ஓ., குமார் புகார்படி, வசந்தி உள்பட, 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.