/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பெல்ட்'டால் தாயை தாக்கிய 'போதை' மகன் கைது
/
'பெல்ட்'டால் தாயை தாக்கிய 'போதை' மகன் கைது
ADDED : ஜூலை 31, 2024 07:33 AM
சேலம்: சேலம், வலசையூர், சுந்தர் ராஜன் தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா, 52. இவரது மகன் ராம்-குமார், 26. டிப்ளமோ படித்துவிட்டு, 4 ரோட்டில் உள்ள ஜவுளி கடையில் பணிபுரிகிறார். இவ-ருக்கு திருமணமான நிலையில், மனைவி பிரிந்து சென்று விட்டார். கடந்த, 26ல் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த ராம்குமார், தாயிடம் வேறு திருமணம் செய்து கொள்ள பணம் வேண்டும் என கேட்டார்.
அப்போது தங்கைக்கு மட்டும் பணம் கொடுப்-பதாக கூறி தகராறில் ஈடுபட்டார். மஞ்சுளா, பணம் இல்லை எனக்கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ராம்குமார், 'பெல்ட்'டால் மஞ்சுளாவை தாக்கினார். காயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் புகார்படி வீராணம் போலீசார் ராம்குமாரை நேற்று கைது செய்தனர்.