sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. உட்பட இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விருதுநகர் சிறையில் அடைப்பு

/

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. உட்பட இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விருதுநகர் சிறையில் அடைப்பு

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. உட்பட இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விருதுநகர் சிறையில் அடைப்பு

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. உட்பட இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விருதுநகர் சிறையில் அடைப்பு


ADDED : ஜூலை 11, 2024 04:41 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: காரியாப்பட்டியில் நிலத்தை அளந்து கொடுக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வி.ஏ.ஓ. செல்வராஜ், 48, உடந்தையாக இருந்த டெய்லர் மோகன்தாஸ், 52, ஆகியோரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இருவரும் விருதுநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

காரியாபட்டி கீழ உப்பிலிகுண்டுவை சேர்ந்தவர் நக்கீரன், 35, இவரின் நிலத்தை அளவீடு செய்து கொடுக்க கடம்பன் குளம் வி.ஏ.ஓ. செல்வராஜ், ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காலை அவரது அலுவலகத்தில் வைத்து நக்கீரன், ரூ. 25 ஆயிரத்தை கொடுத்த போது அவரது நண்பர் டெய்லர் மோகன்தாசிடம் கொடுக்க கூறினார். மோகன்தாஸ் பணத்தை வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

பிடிபட்ட இருவரும் நேற்று முன்தினம் இரவில் ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரித்தா உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் விருதுநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us