sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்

/

ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்

ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்

ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்


ADDED : ஜூன் 12, 2024 12:45 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 12:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஜூன் 20ம் தேதி துவங்கி, ஜூன் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில், 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட், பிப்., 19ல் தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் காரணமாக, துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படாமல், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், சட்டசபை கூட்டத் தொடரை, முன்னதாகவே ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.

எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டத்தை கூட்டுவது, ஒவ்வொரு நாளும் எந்த துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில், அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஜூன் 20ம் தேதி துவங்கி, ஜூன் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

மேலும், இம்முறை காலை 9.30 மணிக்கே அவை நடவடிக்கை துவங்கும். காலை மற்றும் மாலை இரு அமர்வுகளாக கூட்டத்தொடர் நடைபெறும் என அப்பாவு கூறியுள்ளார்.

பதவியேற்பு

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட், இன்று எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.






      Dinamalar
      Follow us