வட மாநிலங்களில் கங்கை நதிக்கு நடைபயணமாக சென்று அங்கிருந்து புனித நீரை காவடியில் சுமந்து வந்து தங்கள் ஊரில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வது கன்வர் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது; அவ்வாறு நடைபயணம் மேற்கொண்ட பக்தர் ஒருவர் காவடியின் ஒருபுறத்தில் தன் மகளை சுமந்து சென்றார். இடம்; மீரட், உத்தரபிரதேசம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வஞ்சூரில் உள்ள வஞ்சியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு 30 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
நடைபாதையை மறைத்து தகர அட்டை விழுந்து இருப்பதால் நடந்து செல்வோருக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இடம்: லங்கா கார்னர், அரசு மருத்துவமனை அருகில்
ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நாக சிலைக்கு பால் ஊற்றி, பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
எத்தனை வெயிலையும் தாங்கும் கற்பகதரு பனை மரங்கள் இந்த ஆண்டு வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் காய்ந்து வருகின்றன.. இடம்: திருநெல்வேலி மாவட்டம், இராமகிருஷ்ணாபுரம்..