மேட்டுப்பாளையம் சிவபுரம் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் ஸ்ரீ ஐயப்பன் சேவா சமிதியின் 64 ஆவது ஆண்டு விழா மற்றும் மண்டல மகோற்சவ விழாவில் திருச்சூர் புஞ்சமக்கள் குழுவினரின் வண்ண மயில்கள் நடனம் நிகழ்ச்சி ஊர்வலம் நடந்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.