உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை தினமலர் வெளியீட்டாளர் எல். ஆதிமூலத்திற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பாளர்களால் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று வழங்கப்பட்டது., இடமிருந்து நகர ஆர்எஸ்எஸ்,, செயலாளர் ராம்குமார், மாநில ஊடகத்துறை பொறுப்பாளர் நரசிம்மன், நகர செயலாளர் சுதர்சன் ஆகியோர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.