மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு, வடசென்னை வடக்கு - கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், புதுவண்ணாரப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 10,107 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு நடந்தது. இதில் அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு,10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.