டாக்டர் ரத்தினவேலு சுப்பிரமணியம் முத்தியால்பேட்டை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 27ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் ரத்தினவேலு சுப்பிரமணியம் முத்தியால்பேட்டை பள்ளி குழுமத்தின் தலைவர் வேணுகோபாலா பரிசுகளை வழங்கினார். உடன் இடமிருந்து வலம் - சவுந்தர்யா, நடேச செட்டி திருக்கல்யாண மண்டப அறக்கட்டளையின் அறங்காவலர் பாலாஜி, பள்ளியின் இயக்குனர்கள் நாராயணன், ஏகாம்பரம் மற்றும் விஜயகுமார். இடம் : மண்ணடி, சென்னை
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.