வானொலி அண்ணா என்.சி ஞானப்பிரகாசம் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா சென்னையில் நடந்தது இதில் கலந்துகொண்ட இடமிருந்து அவரது மைத்துனன் சவுந்தரராஜன், மருமகள் ரம்யா, முன்னாள் எம்.பி இளங்கோவன், நடிகர் சிவகுமார், பேச்சாளர் வாசுகி கண்ணப்பன், ஞானப்பிரகாசம் அவர்களின் மகள் கற்பகம், மனைவி ரேவதி, வழக்கறிஞர் அருள் மொழி, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள், சேக்கிழார் ஆய்வு மையம் செயலர் சிவாலயம் மோகன், ஞானப்பிரகாசம் அவர்களின் மகன் சபரி, மைத்துனன் சண்முக சுந்தரம், சம்மந்தி தங்கமணி , சகோதரர் ராஜாமணி மற்றும் பேரன் லோஹித்.இடம் : ராயப்பேட்டை
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.