ஶ்ரீமன் அய்யா வைகுண்ட சுவாமியின் 192 வது அவதார தின விழா மற்றும் ஶ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரம் ஶ்ரீ வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாறு புத்தக வெளியீட்டு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது இதில் புத்தகத்தை வெளியிட்ட தமிழக கவர்னர் ரவி உடன் இடமிருந்து நூலாசிரியர் ராமலிங்கம், மணலி அய்யா வைகுண்ட தர்மபதி நிர்வாகி துரைப்பழம், துலங்கும்பதி துவரயம்பதி நிர்வாகி ராமநாதன், அகிலம் அகாடமி நிறுவனர் சீதாலட்சுமி, அய்யா வழி சேவை அமைப்பு செயலர் சுரேஷ் பொண்ணு நாடார். இடம் : கிண்டி.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.