கி.வா.ஜ குடும்பத்தினர் மற்றும் கலைமகள் இலக்கிய மாத இதழ் இணைந்து நடத்திய வாகீசகலாநிதி கி.வா.ஜ சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பரிசினை நீதிபதி சுவாமிநாதன் வழங்கினார் உடன் இடமிருந்து பரிசுபெற்ற எழுத்தாளர் பாளை இசக்கி ராஜன்,நாவலாசிரியர் தேவி பாலா, பரிசு பெற்ற எழுத்தாளர் ஜவஹர், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், பரிசுபெற்ற எழுத்தாளர் பன்னீர்செல்வம் மற்றும் கி.வா.ஜ அவர்களின் புதல்வர் குமார்.இடம் : மயிலாப்பூர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.