இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் தன்னார்வ இயக்கமான ஸ்பிக் மெக்கே- வின் 9 வது மாநாடு சென்னை ஐ.ஐ.டி யில் நேற்று துவங்கியது இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நினைவுப் பரிசு வழங்கிய ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி உடன் இடமிருந்து திரிபுரா மாநில கவர்னர் இந்திர சேனா ரெட்டி, ஸ்பிக் மெக்கே தலைவர் ராதாமோகன் திவாரி, தமிழக ஒருங்கிணைப்பாளர் ஜெயஶ்ரீ கண்ணன்.இடம் : கிண்டி.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.