தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வழிகாட்டி நிகழ்ச்சியை சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் தலைவர் ஸ்ரீராம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து வலம் - கல்வி ஆலோசகர் அஸ்வின், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் புருஷோத்தமன் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாணவர்கள். இடம் : தி.நகர், சென்னை
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.