சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள மீனாட்சி அம்மாள் பல் மருத்துவ கல்லூரியில். இந்திய பீரியடோன்டாலஜி சங்கம் ஐ.எஸ்.பி. சென்னை ஐ.எஸ்.பி. ஸ்டடி குரூப் மற்றும் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து பிரியோ அண்டர் கிராஜுவேட் என்ற இரு நாள் மாநாடு நடத்தியது இதில் பற்கள் ஈறு நோய் குறித்த புத்தகத்தை தமிழ்நாடு அரசு மருத்துவ படிப்பு மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் சங்குமணி புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததையொட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு பேச்சுவார்த்தை நடத்தினார்.