தேசிய டாக்டர்கள் மற்றும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் தினத்தை முன்னிட்டு ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில் சென்னையில் புகழ் பெற்ற 5 மருத்துவர்கள் மற்றும் சார்ட்டட் அக்கவுண்டன்ட்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சார்ட்டட் அக்கவுண்டன்ட் சந்தான கிருஷ்ணனுக்கு விருது வழங்கிய, தி இந்து குழுமத்தின் இயக்குனர் ராம் உடன் இடமிருந்து ரோட்டரி மாவட்டம் 3233 கவர்னர் மகாவீர் போத்ரா, எஸ்.ஐ.ஆர்.சி தலைவர் கீதா,சார்ட்டட் அக்கவுண்டன்ட் இளன்குமரன், வி.எச்.எஸ் மருத்துவமனை செயலர் சுரேஷ் மற்றும் ராஜன் கண் மருத்துவமனை நிறுவனர் ராஜன்.இடம் : தி நகர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.