சென்னை நாணயவியல் அமைப்பு சார்பில் , தேசிய அளவிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சங்ககால தமிழ் நாணயங்கள், பணத்தாள்கள், தபால் தலைகள் மற்றும் கலைப் பொருட்களின் மூன்று நாள் கண்காட்சி துவங்கியது. அதை ஆர்வமுடன் பார்வையிடும் பொதுமக்கள். இடம் : விருகம்பாக்கம், சென்னை
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.