தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் ஒட்டுமொத்த பிரிவில் தொடந்து 6 வது ஆண்டாகவும், பொறியியல் பிரிவில் தொடர்ந்து 9 வது ஆண்டாகவும் முதலிடத்தை பெற்றுள்ள ஐ.ஐ.டி மெட்ராஸ் கல்வி நிறுவனம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் விருதுகளுடன் இடமிருந்து ஐ.ஐ.டி பதிவாளர் ஜேன் பிரசாத், பேராசிரியர் ராபின்சன்,ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி பேராசிரியர்கள் முரளி மற்றும் ரஜ்நிஷ் குமார்.இடம் : கிண்டி.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு கால தாமதம் ஆவதால், அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பயன்பாட்டிற்கு வராமல் சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தென்படுகின்றன.