பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வெளியானவுடன், பிளஸ் 1 சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்த மாணவியர். இடம்: ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வெளியானவுடன், மேல்நிலை கல்வியில் உள்ள பாடப்பிரிவுகள் குறித்து ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை போட்டோ எடுத்த மாணவி. இடம்: ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.
ஆன்லைன் மருந்து விற்பனையை கட்டுப்படுத்தக்கோரி, மெடிக்கல் ஷாப்கள் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் அடைக்கப்பட்டிருந்த கடை
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் :தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறித்த அறிவிப்பு பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இடம்: பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிமி வேலி பகுதியில் எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துதற்காக தீயணைப்புத்துறையினர் ஹெலிகாப்டர் வாயிலாக தண்ணீரைப் பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து, முளைத்து அழுகி வீணாகின்றன.