ஸ்ரீ தியாகபிரம்ம கான சபா சார்பில் 13வது ஸ்ரீ ஜெயந்தி இசை நிகழ்ச்சி-2024 நேற்று துவங்கியது. இதில் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேடையில் (இடமிருந்து - வலம்) வாணி மஹால் தலைவர் டெக்கான் மூர்த்தி, துணை தலைவர் சந்திரசேகர், விருதாளர்கள் வாய்ப்பாட்டு கலைஞர் சந்தீப் நாராயண், பரதநாட்டிய கலைஞர் பினேஷ் மகாதேவன், விருதுகளை வழங்கிய சிட்டி யூனியன் பவுண்டேஷன் தலைவர் பாலசுப்பிரமணியன், விருதாளர் நாடக கலைஞர் ரத்னம் கூத்தபிரான், மிருதங்க கலைஞர் மற்றும் மிருதங்க கலைஞர் சுதின்தரா.இடம்: தி.நகர்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கு குலுக்கள் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இடம்: பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.