மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மிசோரம் மாநிலத்தின் சிறப்பு செயலாளர் விவசாயம் விவசாயிகள் நலன் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ராம்டின் லியானி தலைமையிலான குழுவினர் உருளைக்கிழங்கு ஏலம் இடும் பகுதியில் பார்வையிட்டனர். அருகில் இணை பதிவாளர் தயாளன் மற்றும் துணைப் பதிவாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு கால தாமதம் ஆவதால், அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பயன்பாட்டிற்கு வராமல் சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தென்படுகின்றன.