புதுச்சேரி தேங்காய்த்திட்டு ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் நாளிதழ் வினாடி-வினா நிகழ்ச்சியை சப்-கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். அருகில் தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், ஆச்சாரியா கல்வி குழுமம் தலைவர் அரவிந்தன்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.