இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மீனவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக மீனவர் அணி மாநில தலைவர் நீலாங்கரையை சேர்ந்த முனுசாமி வரவேற்று அவர்களுக்கு போதிய உதவி செய்தார்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.