தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம், திருப்பூர் மாவட்டம் கணியாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்தது. முகாமில் பங்கேற்ற முதியவருக்கு உடல் மிகவும் பலவீனமாக இருந்ததால், அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு, மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.