கோவை ஈச்சனாரி ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் கணேசன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அருகே ( இடமிருந்து) வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் சுந்தரவல்லி, எம்.பி., ஈஸ்வரசாமி, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலர் வீரராகவராவ், ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் கருணாகரன் உள்ளிட்டோர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.