கோவில்பட்டியில் நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சந்தைப்படுத்துதல் கருத்தரங்கில் நவீன முறை வேளாண் இடுபொருட்கள், இயற்கை சார்ந்த பூச்சி மருந்துகள் கண்காட்சியை எஸ்.எல்.பி., எத்தனால் இணை இயக்குனர் ஸ்ரீனிவாசன் ராமசுப்பு (வலமிருந்து 2வது), செய்நிலம் அக்ரி பிசினஸ் கல்ச்சர் நிறுவனர் ஜெகநாதன் பார்வையிட்டனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.