அரசு பள்ளிகளில் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், உணவு பாதுகாப்புத் துறை சார்பில், ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பயிற்சி கையேட்டை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை கமிஷ்னர் லால்வேனா வழங்கினார். உடன் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்டோர். இடம் :அரும்பாக்கம்,சென்னை
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.