தினமலர் நாளிதழ் மற்றும் தி சென்னை சில்க்ஸ் ஸ்ரீகுமரன் தங்கமாளிகை இணைந்து நடத்திய மார்கழி விழாக் கோலம் கோலப்போட்டி. கோவை வீரகேரளம் பெரிய தோட்டம் காலனியில் உள்ள வேஸ்ட் பிரணவம் அப்பார்ட்மெண்டில் நடைபெற்றது .இதில் ரங்கோலி மற்றும் புள்ளிக்கோலத்தில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அப்பார்ட்மெண்ட் தலைவர் பாலச்சந்திரன் மற்றும் செயலாளர் கஜேந்திரன்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.