கடலூர் தினமலர் தேவனாம்பட்டினம் கடற்கரை சில்வர் பீச்சில் தினமலர் நாளிதழ், சூப்பர் ருசி பால் இணைந்து நடத்திய மெகா கோலப்போட்டியில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்ற போட்டியாளர்கள்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.