மியூசிக் டெம்பிள் மற்றும் அனுஷம் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், மயிலாப்பூரில் நடந்து நிகழ்ச்சியில், மருத்துவர் எம்.கே. சீனிவாசனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி வழங்கினார். உடன் இடமிருந்து வலம் - பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன், சுவாமி வசுதேவானந்தா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, சாஸ்த்ரா பல்கலை இயக்குனர் சுதா சேஷய்யன், சூப்பர்ஆட்டோ போர்ஜ் நிறுவனத்தின் தலைவர் சீதாராமன் மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததையொட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு பேச்சுவார்த்தை நடத்தினார்.