சென்னை வர்த்தக மையத்தில் நடந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் 2023 , 2024 ஆம் ஆண்டிற்கான மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் பெற்றுக்கொண்டார். உடன் இடமிருந்து தி.மு.க எம்.பி. டி.ஆர் பாலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன். இடம் : நந்தம்பாக்கம்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.