ராணுவ வீரர்களை பெருமைபடுத்தும் விதமாக 5 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாரியர் யோகாசனம், பட்டர்பிளை யோகாசனம்,பத்மாசனம் செய்து அசத்தினர். இடம்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமக குளக்கரை.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.