சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில், தினமலர் நாளிதழ் மற்றும் சத்யா இணைந்து வழங்கும் மாபெரும் வீட்டு உபயோக பொருள்களின் நுகர்வோர் கண்காட்சியை செயின்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் மற்றும் சின்னத்திரை நடிகை நந்தினி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். உடன் இடமிருந்து பேபர் பிராங்க் விற்பனை பிரிவு தலைமை அதிகாரி ஜாபர் கான், தினமலர் நாளிதழ் இணை இயக்குநர் ஆ. லட்சுமிபதி, இணை ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி, இணை இயக்குநர் ஆர். சீனிவாசன்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.