தென் சீனக் கடல் பகுதிக்கு, நம் அண்டை நாடான சீனா முழுதும் உரிமை கோரி வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை சீனா மதிக்கவில்லை. இந்நிலையில், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி முதல் முறையாக நடக்கிறது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில், பிலிப்பைன்ஸ் அருகே கூட்டுப் பயிற்சியில் நேற்று ஈடுபட்ட இரு நாட்டு கடற்படை போர்க்கப்பல்கள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு கால தாமதம் ஆவதால், அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பயன்பாட்டிற்கு வராமல் சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தென்படுகின்றன.