திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விவசாயி லட்சுமி தேவி, நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாத்து வருகிறார். அரிய வகை சின்னார் நெல் பயிர் மூலம் வாழிய நிலனே எனும் புறநானூற்றுப்பாடலை உயிர்ப்பித்துள்ளார். சுற்றிலும் பச்சைப்பசேலென தெரிவது நெல்லையப்பர் ரக நெல்; எழுத்தாக இருப்பது சின்னார் நெல் ரகம்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.