நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அங்கிருந்து பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராகி வருகிறது. இதற்காக எல்லையில் உள்ள, 50 ஆயிரம் மக்களை வெளியேறும்படி கூறியுள்ளது. அதன்படி, மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் மக்கள். இடம்: கைபர் பக்துங்க்வா, பாகிஸ்தான்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு கால தாமதம் ஆவதால், அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பயன்பாட்டிற்கு வராமல் சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தென்படுகின்றன.