அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் பீட்டர்சன் பகுதியில், 140 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட குழாய் வழியாக தண்ணீர் வினியோகம் நடந்து வந்தது. அந்தக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், 2 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பொதுவான இடங்களில் கழிப்பிடம், குளியல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர, குடிப்பதற்காக குடிநீர் பாட்டில்களை அரசு வினியோகித்து வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.