தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர் வடகரையில் தற்போது பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்களை ரசித்தவாறு புகைப்படம் எடுத்து செல்லும் தமிழகம் மற்றும் கேரள சுற்றுலா பயணிகள். பூக்களுக்கு நடுவே புகைப்படம் எடுத்துக்கொள்ள தோட்ட உரிமையாளர்கள் சார்பில் ரூ50 வசூலிக்கப்படுகின்றது.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.