தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வயல்வெளியில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த வழியாக செல்லும் பயணியர் தங்கள் வாகனங்களை நிறுத்தி பூக்களை ரசிப்பதுடன், அவற்றுக்கு நடுவே நின்று புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர். பூந்தோட்ட உரிமையாளர் இதற்கு ஒரு குழுவிற்கு ரூ.50 வீதம் கட்டணம் வசூலிக்கின்றனர். பூக்களை விற்றால் தான் காசு என்பது இல்லை. பூத்து நின்றாலும் காசு தான் போலும்.
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் மேற்கு வங்கம் பீகார் அணிகள் மோதின.
கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஏ.கே.டி.,பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பிரசாந்த். ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.