அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க் பகுதியில் தற்போதும் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகள் பயன்பாட்டில் உள்ளன. அங்கு, 200 குதிரைகளும், 68 சாரட் வாகனங்களும் உள்ளன. இந்தத் தொழிலில், 200 பேர் ஈடுபட்டுள்ளனர். குதிரைகள் முறையாக பராமரிக்கப்படாததால், அவை சாலையிலேயே சரிந்து விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, இந்த குதிரை பூட்டிய சாரட் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, வரும், 2026ம் ஆண்டு ஜன., 1ல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், குதிரைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதாகவும், தொழிலில் ஈடுபட்டுள்ள 200 பேர் பாதிக்கப்படுவர் என்றும் கூறி, தடையை எதிர்த்து போராட்டம் நடந்தது.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.