மேகவெடிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் வட மாநிலங்களில் பெருமழை பெய்து வருகிறது. ஹிமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அடித்து வரப்பட்ட மண் சகதி பார்மோர் பகுதியில் உள்ள சாலையை மூடியுள்ளது. நடந்து செல்லவே முடியாத அந்த சாலையை வாகனங்களில் கடக்க முயன்ற உள்ளூர் மக்கள்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.