இந்தோனேஷியா-ஜகார்த்தா புறநகர் பகுதிகளில் டெபெர்க் என்ற இடமும் ஒன்று. அங்கு பறவைகள் குறிப்பாக மகாவ் போன்ற வண்ணமயமான கிளிகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது, பயிற்சி கொடுப்பது என்ற கலாசாரம் பிரபலமாக உள்ளது. படத்தில் இருக்கும் அல்பி அல்வார் ராம்லி போன்ற பறவைக் காதலர்கள், கிளிகளை சாகசங்கள் செய்யவும், கட்டளைகளை ஏற்கவும், மக்களுடன் பழகவும் பயிற்சி அளித்து அதன் மூலம் வருமானம் பார்க்கின்றனர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.