ஊட்டி நகராட்சி கமிஷனர் பயன்படுத்தும் இந்த வாகனம் ஆய்வு மற்றும் பல்வேறு தேவைகளுக்கு நகர் பகுதிக்கு வரும் போது, பல மணி நேரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். விதிமீறலை கண்காணித்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசாரும் மவுனம் காக்கின்றனர். மணிக்கூண்டு சாலையில் இப்படி விதிமீறி நிறுத்தப்பட்ட அரசு வாகனத்தால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.