திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறைக்கு கூரை அமைக்கப்படாமல் இருந்ததால், மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து அரசு பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு கூரை அமைக்கப்பட்டு உள்ளது.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.