இடைவிடாத வாகன போக்குவரத்து காரணமாக, மழையில் நனைந்த படி சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளியை பார்த்த இந்த பெண்மணி, தன் குடையை அவருக்கு பிடித்து அவர் மழையில் நனையாமல் சாலையைக் கடக்க உதவி செய்தார். இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், திண்டுக்கல்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.