நாடு முழுவதும் ராணுவத்துக்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. கோவை ரெட் பீல்ட்சில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் சான்றிதழ் சரி பார்க்கும் பணிக்காக காத்திருந்த இளைஞர் கூட்டம்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.