கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை சிப்காட் தொழில் பூங்காவில் தைவான் நாட்டின் பவுசென் குழுமத்தைச் சேர்ந்த, 'ஹை க்ளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் அமைக்கும் காலணிகள் உற்பத்தி ஆலை வடிவமைப்பை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். உடன் அமைச்சர்கள், வேலு, ராஜா மற்றும் காலணி உற்பத்தி ஆலை நிர்வாகிகள்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.