கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் அறுவடைக்கு பிந்தைய காலத்தில் நடத்தப்படும் பாரம்பரிய வீர விளையாட்டு கம்பாலா. சேறும், சகதியுமான பந்தய களத்தில் நடத்தப்படும் இந்த போட்டியில் வீரர்கள், எருதுகளுடன் அவற்றுக்கு இணையான வேகத்திற்கு ஓடி இலக்கை அடைவர். பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் இந்த நிகழ்வு, மங்களூரு அருகே நடந்தது.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.